கென்யா, 06 செப்டம்பர் (பெர்னாமா) -- கென்யாவில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு நைரி மாவட்டத்தில் உள்ள எண்டராஷா ப்ரைமரி மலைப்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தீச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கென்யா அதிபர் வில்லியம் ரூத்தோ குறிப்பிட்டார்.
அதேவேளையில், தங்கும் வசதி கொண்ட பள்ளிகள், கல்வி அமைச்சு பரிந்துரைத்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்குத் துணை அதிபர் ரிகாதி கச்சகுவா வலியுறுத்தினார்.
கென்யாவில் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் தீ விபத்து நிகழ்வது வழக்கமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)