உலகம்

மோதல் தீவிரமடைந்தால் உலகளவில் பசி பட்டினி மோசமடையும்- ஐ.நா எச்சரிக்கை

நியூ யார்க், 18 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் தொடர்புடைய மோதல் தீவிரமடைவது உலகளவில் பசி பட்டினியை மேலும் மோசமடையச் செய்யும் என்று ஐக்கிய நாடுகள், ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி பேசிய ஐ.நா. துணை பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், மத்திய கிழக்கு மோதல் இந்த ஆண்டின் மத்தியப் பகுதிக்குள் முடிவுக்கு வராமலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கு மேல் நீடித்தாலும், 2026-ஆம் ஆண்டில் மேலும் கிட்டத்தட்ட நான்கு கோடியே 50 லட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவித்தார்.

[ read more ]
2h ago
 MORE NEWS
 பரிந்துரை