பாரிஸ், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று அதிகாலை தொழாயிரத்தாவது கோலை அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காற்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
UEFA நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 7-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் டியோகோ டலோட் முதல் கோலை அடித்தார்.
அதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 34-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோல் சாதனை கோலாக மாறியது.
இப்போட்டியில் போர்த்துகல் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)