உலகம்

மியன்மார் ஷான் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்

11/09/2024 07:28 PM

யங்கூன், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- மியன்மார்,  ஷான் மாநிலத்தில் உள்ள டச்சிலிக் நகரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

மே சாய் ஆற்றின் நீர் அபாயக் கட்டத்தைக் கடந்தால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

எட்டு நகரங்களில் உள்ள சுமார் 3,838 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டதாக அரசு நாளிதழான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு காற்பந்து மைதானங்களில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டன.

மியன்மார் தீயணைப்பு சேவை துறை மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)