விளையாட்டு

கெடா எஃப்சியை வீழ்த்தியது கே.எல் சிட்டி எஃப்சி அணி

15/09/2024 07:25 PM

செராஸ், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டி குறித்த செய்தி...

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், கே.எல் சிட்டி எஃப்சி  அணி, 5 - 0 என்ற புள்ளிக் கணக்கில் கெடா எஃப்சி அணியை வீழ்த்தியது.

செராசில் உள்ள கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் 14ஆவது நிமிடத்தில், தி சிட்டி பாய்ஸ் அணி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்த இறக்குமதி ஆட்டக்காரரான ஜோவன் மோதிகா மூலம் முதல் கோலை அடித்தது.

அதைத் தொடர்ந்து 23ஆவது நிமிடத்தில் ஜோஸ்யூ இரண்டாவது கோலை அடித்த வேளையில், மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் ஜாஃப்ரி யாஹ்யாமூன்றாவது கோலை அடித்து ஆட்டத்தின் முதலாம் பாதியை நிறைவு செய்து வைத்தார்.

இதனிடையே, இரண்டாம் பாதி ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்திலும் 58-ஆவது நிமிடத்திலும் மேலும் இரு கோல்கள் போடப்பட்டு ஆட்டம் கே.எல் சிட்டி எஃப்சி-க்கு சாதகமாக நிறைவடைந்தது.

இளம் கோல் காவலரான, முஹம்ட் ஹாபிஸி முகமட் ஹஜாஸியால், ஜோஸ்யூ அடித்த கோலை தடுக்க முடியாமல் போனதால், உபசரணைக் குழுவான கே.எல் சிட்டி எஃப்சி  அணி, தனது வெற்றியை நிலைநிறுத்தியது.

இதனிடையே, நேற்று மாலை, பாரோயில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் அரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், பேராக் எஃப்சி அணி நெகிரி செம்பிலான் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்துள்ளது.

இது, இப்பருவத்தில் பேராக் எஃப்சி அணிக்கு மூன்றாவது வெற்றியாகும்.

பேராக் எஃப்சி அணியின் இந்த ஒரே கோலை பிரேசிலைச் சேர்ந்த இறக்குமதி ஆட்டக்காரர் கிளேட்டன் டா சில்வீரா டா சில்வா ஆட்டத்தில் 47ஆவது நிமிடத்தில் அடித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)