அரசியல்

எஸ்பிஆர்எம் நிர்ணயித்த காலத்திற்குள் துன் மகாதீரின் பிள்ளைகள் சொத்துகளை அறிவித்தனர்

18/09/2024 05:59 PM

புத்ராஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் மகன்களான மிர்ஸான் மகாதீர் மற்றும் டான் ஶ்ரீ மொக்ஸானி மகாதீர்  இருவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் நிர்ணயித்த காலக்கட்டத்திற்குள் தங்களின் சொத்துகளை அறிவித்துள்ளனர்.

அவ்விவகாரத்தை, டான் ஶ்ரீ அசாம் பாக்கி இன்று உறுதிப்படுத்தினார்.

சொத்து அறிவிப்பு தொடர்பான விளக்கம் மற்றும் கூடுதல் விபரங்களுக்காக, 
மிர்ஸான், மொக்ஸானி ஆகிய இருவரின் வழக்கறிஞர்களுடன் எஸ்பிஆர்எம் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும்  அசாம் பாக்கி கூறினார்.

டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்க தொடங்கியதில் இருந்து, அதாவது 1981-ஆம் ஆண்டு முதல் தங்களின் சொத்துகளை அறிவிக்கும்படி கடந்த ஜனவரி மாதம், அவ்விருவருக்கும் எஸ்பிஆர்எம் உத்தரவிட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)