சிரம்பான், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று சிரம்பானில் 10 வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்தில் ஓர் ஆடவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்.
தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த ஆடவர் மாண்டதாக உறுதி செய்யப்பட்டது.
விபத்து குறித்து பிற்பகல் மணி 1.28-க்கு அழைப்பு கிடைத்தவுடன் சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை சேந்த ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு மூத்த அதிகாரி கொமான்டர் ஹம்லான் இஷாக் தெரிவித்தார்.
லாரி கீழே சிக்கிக் கொண்ட ஆடவர், இயந்திரத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும் சொற்ப காயங்களுடன் லாரி ஓட்டுநர் உயிர்த் தப்பினார்.
மேல் நடவடிக்கைக்காக உயிரிழந்தவரின் சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள், துவாங் ஜஃபார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)