ஜார்ஜ்டவுன், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று ஜார்ஜ்டவுன், லெபோ கெரேஜாவில் கார் மீது கட்டிடத்துடன் மரம் சாய்ந்ததில் அதில் இருந்த தந்தையும் மகளும் உயிரிழந்தனர்.
பிற்பகல் மணி 2.15-க்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பலியான இருவர் சீன பிரஜைகள் என்று நம்பப்படுகிறது.
காரை ஓட்டுநர் செலுத்திய நிலையில், முன் பயணிகள் இருக்கையில் மகளும் பின் இருக்கையில் தந்தையும் அமர்ந்திருந்தனர்.
மரம் விழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு ஆடவர் காரில் இருந்து வெளியேறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்ததை வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தினார்.
மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]