உலகம்

இந்தியாவில் காற்றுத்தூய்மைக்கேட்டை குறைக்க மேக விதைப்புக்கான பரிசோதனை

29/10/2025 02:45 PM

இந்தியா, 29 அக்டோபர் (பெர்னாமா)-- இந்தியா புது டெல்லியில் செயற்கை மழைப்பொழிவு மற்றும் காற்றுத்தூய்மைக்கேடு பிரச்சனைகளைக் குறைக்க செவ்வாய்க்கிழமை மேக விதைப்புக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அதிகாரிகளின் இந்நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே சினத்தைத் தூண்டியுள்ளது.

இந்தியத் தலைநகரின் சில பகுதிகளில் நீடித்து வரும் மோசமான காற்று மாசுபாடு பிரச்சனையைக் கையாள செயற்கை மழை பொழிவும் காற்றுத்தூய்மைக்கேட்டை போக்கவும் விமானம் ஒன்றின் மூலம் மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.

மேக விதைப்பு என்பது மழையைத் தூண்டுவதற்காக மேகங்களில் ரசாயனங்களைக் கலக்கும் வானிலை மாற்ற முறை மேற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், அதன் செயல்திறன் நிச்சயமற்றதாகவே உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இச்சோதனை அரசாங்கத்தின் காஞ்சூர் இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் வரும் நாட்களில் இந்நடவடிக்கையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி அமைச்சர் மஞ்சந்தேர் சிங் ஸிர்சா தெரிவித்தார்.

எனினும், இதுபோன்று ஒரு நாளுக்கு மட்டும் என்ற தற்காலிக தீர்வை தேடாமல் இதற்கு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்குமாறு பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)