ஜாலான் பார்லிமன், 30 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசியானின் 11வது உறுப்பினராக திமோர் மற்றும் லெஸ்தெ இணைந்திருப்பது இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட ஆசியான் மாநாட்டின் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
மேலும், தாய்லாந்து மற்றும் கம்போடிய தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தமும் இந்த மாநாட்டின் மற்றொரு சாதனை அடையாளம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருகிறார்.
அமெரிக்க அதிபரின் வருகையும் மலேசியா மீதான உலக கவனத்தை ஈர்க்க வழிவகுத்ததாக டத்தோ ஸ்ரீ அன்வார் விவரித்தார்.
"அதிபர் டோனல்ட் டிரம்புடனான அமைதி மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு சீனப் பிரதமர் லி சியாங்கின் வருகையும் ஒரு பெரிய வெற்றியாகும். மேலும், ஆசியானின் முதல் மேம்படுத்தப்பட்ட எஃப்.டி.ஏ 3.0இல் சீனாவுடன் கையெழுத்திட்டதன் மூலம் அதைப் பயன்படுத்திக் கொண்டோம்," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வியாக்கிழமை நடைபெற்ற மக்களைவைக் கூட்டத்தில் பிரதமர் அவ்வாறு கூறினார்.
இந்த சாதனை மற்ற ஆசியான் நாட்டுத் தலைவர்களின் உதவி மற்றும் பல அமைச்சுகளின் ஒத்துழைப்பின் வழி அடையப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)