கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி பெரிக்காத்தான் நேஷனலின் பொது செயலாளர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவிருப்பதை டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி உறுதிபடுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசினின் அதிகார வரம்பிற்கு உட்பட்டே அக்கூட்டணியின் பொது செயலாளராக தாம் நியமிக்கப்பட்டதால் தாம் இம்முடிவை எடுத்தாக அவர் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதே தேதியில் சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனலின் தொடர்பு அமைப்புத் தலைவர் பதவியிலிருந்தும் விலகும் நிலைப்பாட்டை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)