மதுரா, 06 மார்ச் (பெர்னாமா) -- இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள டௌஜி மஹாராஜ் எனும் கோவிலில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இவ்வாண்டும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.
உத்தரபிரதேசதம் மதுராவில் ஹோலி பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது.
அங்கு சுமார் 10 நாட்கள் முன்பாகவே ஹோலி தொடங்கி விடுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)