போர்ட்டிக்சன், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- சிரம்பானில் மேலும் ஒரு புதிய மருத்துவமனையை நிறுவுவதற்கு, நெகிரி செம்பிலான் அரசாங்கம் நிதி அமைச்சிடம் இன்று நிதியைக் கோரியது.
அம்மாநிலத்தின் முதன்மை மருத்துவமனையான சிரம்பான் துவாங்கு ஜாக்பார் மருத்துவமனையில் நிலவும் நெரிசலைத் தவிர்த்து மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை வழங்க இம்முயற்சி முன்னெடுக்கப்படுவதாக, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.
அதோடு, அம்மாநில மக்கள் இருதய நிபுணர்களின் சேவையைப் பெறும் பொருட்டு துவாங்கு ஜாக்பார் மருத்துவமனையில் இருதய நோய் நிபுணத்துவ சிகிச்சையகத்தைச் சுகாதார அமைச்சு அமைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அமினுடின் ஹருன் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)