மணிப்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியா, மணிப்பூரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை விதித்ததோடு இணைய சேவையையும் முடக்கியுள்ளனர்.
அம்மாநிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக இந்த இனக் கலவரம் நீடித்து வரும் வேளையில், தற்போது புதிய அலை போராட்டங்களும் தொடங்கியுள்ளன.
இப்போராட்டங்களின்போது, கடந்த 10 நாட்களில் ஆயுதமேந்திர குழுக்கள் ஆளில்லா விமானத் தாக்குதலையும் சுயமாக தயாரிக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலையும் மேற்கொண்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, ஞாயிற்றுக்கிழமை வரை இணைய மற்றும் கைத்தொலைபேசி சேவை முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 16 மாதங்களாக நீடித்து வரும் இந்நெருக்கடிக்குத் தீர்வுகாண அதிகாரத் தரப்பினர் தவறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)