லீமா, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ ஃபுஜிமோரி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 86.
யின் மரணத்தை அவரது மகள் கெய்கோ ஃபுஜிமோரி தமது X தளத்தில் உறுதிபடுத்தினார்.
1990-ஆம் ஆண்டுகளில் பெருவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஃபுஜிமோரி பெரிதும் பங்காற்றியுள்ளார்.
இருப்பினும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)