உலகம்

யாகி சூறாவளிக்கு பலியானோரின் எண்ணிக்கை 233-ஆக அதிகரித்துள்ளது.

13/09/2024 06:39 PM

ஹனோய், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  வியட்நாமில் வீசிய யாகி சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த இயற்கை பேரிடரால் 103 பேரை காணவில்லை என்பதால் அவர்களைத் தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகிறது.

லாங் நூ எனும் பகுதியில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 48 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

800 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டில் வீசிய வலிமையான சூறாவளியாக, யாகி சூறாவளி பதிவாகியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சில பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கினாலும், இன்னும் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)