அரசியல்

மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல்; 1,074 போலீசார் பணிக்கு அமர்த்தப்படுவர்

13/09/2024 08:00 PM

ஜோகூர்பாரு, 13 செப்டம்பர் (பெர்னாமா) --  மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை செப்டர்ம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை குளுவாங்கில் உள்ள துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் சுமூகமாகவும் சீராகவும் நடைபெறுவதைக் கண்காணிக்க சுமார் 1,074 போலீசார் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி குளுவாங், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்நாளில் தேர்தல் நிலைமையை கண்காணிக்கவும், பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு சம்பவத்தை தடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் தங்களின் பணியை மேற்கொள்வர் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)