புத்ராஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- அடுத்த மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக 2023ஆம் ஆண்டிற்கான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிதி அறிக்கைகள் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய தணிக்கைத் துறை தலைவர் டத்தோ வான் சுராயா வான் முஹமட் ரட்சி, அவ்வறிக்கைகளை இன்று மாமன்னரிடம் சமர்ப்பித்த புகைப்படங்கள் சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பதிவில் பகிரப்பட்டிருந்தது.
இன்று இஸ்தானா நெகாராவில் மாமன்னரை நேரடியாக சந்தித்து வான் சுராயா அதனை வழங்கினார்.
இதனிடையே, மடானி பொருளாதாரம், வளமான நாடு, செழிப்புமிக்க மக்கள் என்ற கருபொருளில் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டுகான வரவு-செலவுத் திட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)