கோலாலம்பூர், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024/2025-ஆம் ஆண்டின் ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில், நாட்டை பிரதிநிதித்து களமிறங்கிய ஜோகூரின் ஜேடிதி வெற்றி பெற முடியாமல் போனது.
நேற்றிரவு சீனாவின் ஷங்ஹாய் நகரில் நடந்த ஆட்டத்தில் அது 2-2 என்று ஷாங்காய் போர்ட்டிடம் சமன் கண்டது.
ஆட்டம் தொடங்கியது முதல் கோல் அடிப்பதில் இரு அணிகளும் பெரும் சவாலை எதிர்கொண்டன.
அதில், முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில், ஜேடிதி அதன் முதல் கோலை அரிஃப் அய்மான் ஹனாபி மூலம் அடித்தது.
அந்த வெற்றியை மலேசியா கொண்டாடி முடித்த அடுத்த சில நிமிடங்கிளில் சீனா அதற்கான கோலை அடித்து 1-1 என்று முதல் பாதியைச் சமப்படுத்தியது.
இரண்டாம் பாதியை வெற்றிக்கொள்ளும் இலக்கில் களமிறங்கிய ஜேடிதி மீண்டும் அரிப் அய்மான் அதன் இரண்டாம் கோலைப் போட்டது.
ஆயினும், அந்த வெற்றியைத் தடுத்த நிறுத்த போரடிய ஷாங்காய் போர்ட் , 72-வது நிமிடத்தில் ஜேடிதிக்கு எதிராக மற்றுமொரு கோலை அடித்து 2-2 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.
இவ்விரு அணிகளின் இரண்டாம் ஆட்டம் வரும் அக்டோபர் முதலாம் தேதி ஜேடிதியின் சொந்த மண், சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெறவிருக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)