பொது

3 அம்சங்களை முன்னிறுத்தி 2 திட்டங்களை அறிவித்தது ஜோகூர் அரசாங்கம்

21/04/2025 05:53 PM

ஜோகூர் பாரு, 21 ஏப்ரல் (பெர்னாமா) --   ஜோகூர் சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டு புத்தாக்கம், முதலீடு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி இரு முக்கிய திட்டங்களை ஜோகூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜோகூர் நிதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் JS-SEZ-க்குள் ஆசியான் தொழில்துறை பூங்கா ஒன்றை உருவாக்குதல் ஆகியவை முதன்மை திட்டங்களாகும் என்று அம்மாநில மந்திரி புசார்  டத்தோ ஓன் ஹஃபிஸ் கசி தெரிவித்தார்.

இன்று, ஜோகூர், ஜோகூர் பாருவில் JS-SEZ கூட்டு வணிகம் மற்றும் முதலீட்டு விவாதத்தில் கலந்துகொண்ட  டத்தோ ஓன் ஹஃபிஸ் கசி அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)