சுங்கை பட்டாணி, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- பாலர் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விரிவுப்படுத்த ஒருமைப்பாட்டு அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் மீதான பற்றுதலைக் குழந்தைகளுக்குத் தொடக்க நிலையிலே விதைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்நடவடிக்கை கருதப்படுவதாக ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறினார்.
''தற்போது பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. பாலர் பள்ளி மாணவர்களுக்கும் பரிந்துரைக்கலாம். பிரச்சனை இல்லை காரணம் அது நாட்டின் மீதான பற்றுதலை ஏற்படுத்தும்'', என்று அவர் கூறினார்.
இன்று கெடா, சுங்கை பட்டாணியில் உலக புத்தகம் மற்றும் பதிப்பு உரிமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
நாடு முழுவதும் 34 ஆயிரத்து 654 மாணவர்களை உள்ளடக்கி 781 பாலர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக, ஏரன் கூறினார்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள மாணவர்கள், நேற்று தொடங்கி பள்ளி சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் சின்னத்தை அணியத் தொடங்கினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)