தென் கொரியா, 29 அக்டோபர் (பெர்னாமா)-- வரும் வெள்ளிக்கிழமை தொடங்வுள்ள பொருளாதாரத் தலைவர்களுக்கான ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு APEC கூட்டத்தின் மலேசிய பேராளர்கள் குழுவை வழிநடத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தென் கொரியாவின் கியோங்ஜுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ மொஹமத் ஹசன் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு சஃப்ருல் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் பயணிப்பதாக தென் கொரியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ சம்ரூணி காலிட் தெரிவித்தார்.
அக்டோபர் 31ஆம் தேதி APEC பொருளாதாரத் தலைவர்கள் கலந்துரையாடலின் போதும், நவம்பர் முதலாம் தேதி APEC பொருளாதாரத் தலைவர்களின் ஓய்வு நிகழ்ச்சியின் போதும் மலேசியாவின் தலையீடு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைப்பார் என்று சம்ரூணி காலிட் கூறினார்.
இதில் தேசிய கொள்கைகள் மற்றும் சாதனைகள் முன்னிப்படுத்தப்படுவதோடு உலகளாவிய தெற்கு பகுதிகளுடனான முன்னுரிமைகளும் ஆதரிக்கப்படும் என்றார் அவர்.
''மற்றவர்களுடன், விநியோகச் சங்கலிகளை வலுப்படுத்துதல், இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வட்டார ஒத்துழைப்பில் உட்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தை பிரதமர் தமது அறிக்கையில் வலியுறுத்துவார்.'' என்றார் தென்கொரியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ முஹமட் சம்ரூணி காலிட்
நேற்று, மலேசிய ஊடகவியலாளர்கள் உடனா இயங்கலை வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பில் சம்ரூணி காலிட் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)