உலகம்

பாகிஸ்​தானில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் வழிபாடு

06/11/2025 03:40 PM

பஞ்​சாப், 6 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்​தூர் வழி பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு பிறகு அவ்விரு நாட்டு மக்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர்.

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள நன்கனா சஹீப் நான்​கானா சாஹிப்பிற்கு சென்று வழிப்பட பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சு, இந்தியாவைச் சேர்ந்த 2,100 பக்​தர்​களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர்.

குரு​நானக் தேவ்-இன் 556-வது பிறந்த தினத்தை ஒட்டி, இந்த சிறப்பு வழிப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பக்தர்களுக்கு 10 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள பல வரலாற்று சீக்கிய கோயில்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடு​கள் இடையே முதல் மக்​கள் தொடர்பு நடவடிக்கை இது​வாகும்.

1469-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் லாகூருக்கு அருகிலுள்ள தல்வண்டி எனும் சிறிய கிராமத்தில் குரு​நானக் தேவ் பிறந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)