உத்தரப் பிரதேசம், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியா உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், நான்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
முகுண்ட் கேரா எனும் கிராமத்தில் இருந்து, சிறிய ரக டிரக் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்
பயணித்துக் கொண்டிருந்த போது, அந்த வாகனம் மீது பேருந்து ஒன்று மோதியதாக போலீஸ் விசாரணை கூறுகிறது.
காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை பரவலாக புறக்கணிப்பது மற்றும் தரமற்ற சாலை நிர்மாணிப்பால், இந்தியாவில் சாலை விபத்துக்கள் நிகழ்வது இயல்பாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)