யென் பெய், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- வியட்நாமில் கடந்த வாரம் கரையைக் கடந்த யாகி சூராவளி அந்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை, சுமார் 750 பேர் காயமுற்ற நிலையில், 64 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த வலுவான சூறாவளியினால், தொடர் கனமழை பெய்து வருகின்றது.
புயல்காற்றால் பாலங்கள் ஒன்று இடிந்து விழுந்துள்ளன.
பாலத்தில் இருந்த சில வாகனங்கள் ஆற்றில் விழுந்த நிலையில், மீட்புப்பணிகள் நடைபெறுகின்றன.
இன்னும் பலர் காணமல் போயியுள்ளனர்.
இதுவரை, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 53 ஆயிரம் குடியிருப்பாளர்கள், குறிப்பாக மீன்வளர்ப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள தற்காலிக வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)