பொது

கெடா வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

20/09/2024 08:31 PM

அலோர் ஸ்டார், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று மாலை ஆறு மணி வரையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2115-ஆக அதிகரித்துள்ளது. 

ஏழு மாவட்டங்களில் 40 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கோத்தா ஸ்டார் மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் உள்ள 6 ஆறுகளில் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாட்டியுள்ளது.

குபாங் பாசு மற்றும் பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோலா மூடா மற்றும் பண்டார் பாருவில் எண்ணிக்கை நிலையாக இருக்கும் வேளையில் போக்கோ செனாவில் குறைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)