நியூயார்க், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தங்களின் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்கள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கான 220 கோடி ரிங்கிட் மானியங்களையும் ஆறு கோடி ரிங்கிட் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு டிரம்ப் நிர்வாகம் முன்னதாக நீண்ட பட்டியல் ஒன்றை அனுப்பியிருந்தது.
எனினும், அதனை பின்பற்ற போவதில்லை என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து டிரம்ப்பின் நிர்வாகம் அந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)