யிலான், 28 டிசம்பர் (பெர்னாமா) -- தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானிலிருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு மணி 11.05-க்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவை கருவியில் 7.0-ஆக பதிவாகியது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் வெளியிடப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
நிலநடுக்கத்தினால், தற்காலிக மின்சாரத் தடை ஏற்பட்டது.
73 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டன.
இன்னும் ஓரிரு நாள்களில், 5.5 முதல் 6 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் ஏற்படலாம் என்று வானிலை நிர்வாக மையம் கணித்திருக்கிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]