ஜார்ஜ்டவுன், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- மெதுவாக பணிபுரிவதாக தம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் மாநிலத்தின் அனைத்து திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
மாநில ஜ.செ.க கட்சியில் தலைவர் பதவியை தற்காக்கவில்லை என்றாலும் முதலமைச்சராக தமது கடமைகளை நிறைவேற்றி வருவதாக அவர் கூறுகிறார்.
Penang2030 திட்டம் உட்பட மாநில அரசின் பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் மேலும் பல ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் சோவ் விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில ஜ.செ.க தேர்தலில் தாம் தமது தலைவர் பதவியை தற்காக்க போவதில்லை என்று சோவ் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், Chow-யின் இந்த முடிவு மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பாதிக்காது என்று ஜ.செ.க-வின் பொது செயலாலர் அந்தோணி லோக் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]