பொது

அக்டோபரில் அமலுக்கு வருகிறது PJRM@PASAR திட்டம்

20/09/2024 06:32 PM

கோலா திரெங்கானு, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம், பி.ஜே.ஆர்.எம்-ஐ உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் பொதுச் சந்தைகளில் விரிவுபடுத்தவுள்ளது.

PJRM@Pasar எனும் அத்திட்டம் அக்டோபர் மாதம் தொடங்கி அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

அதிக மக்கள் பயனடையும் வகையில் அத்திட்டத்தை விரிவாக்க அமைச்சு இந்த முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.

''ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தில் உள்ள பொருட்களை நாங்கள் பல்வகைப்படுத்தவுள்ளோம்,'' என்றார் அவர். 

இன்று, திரெங்கானு மாநில ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வானிலை காரணமாக பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோக தடைகளை எதிர்கொள்ளும் பகுதிகள் உட்பட பல அம்சங்களுக்கு PJRM@Pasar திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி தொடங்கி செப்டம்பர் 19-ஆம் தேதி வாரை நாடு முழுவதும் 7173 பி.ஜே.ஆர்.எம் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் 60 லட்சம் அதில் கலந்து கொண்டதாகவும் அர்மிசான் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]