ஐந்தாண்டுகளில் நியூசிலாந்துடனான இருதரப்பு வர்த்தகத்தை 50% அதிகரிக்க மலேசியா இலக்கு 

09/04/2025 06:13 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- 2030-ஆம் ஆண்டிற்குள் நியூசிலாந்துடனான இருதரப்பு வர்த்தகத்தை 50 விழுக்காட்டு அதிகரித்து, 2,500 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாக மதிப்பிடப்படுவதை முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிச்சயமற்ற உலகப் பொருளாதாரத்தில், நியூசிலாந்து போன்ற வர்த்தக பங்காளிகளை மலேசியா மதிப்பதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மலேசியாவுக்கான நியூசிலாந்து தூதர் மைக்கேல் வெஹி மைலேடோங்கா வால்ஷின் வரவேற்ற தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார். 

மலேசியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகக் கூறிய சஃப்ரூல், 2023-ஆம் ஆண்டு தொடங்கி வியூகக் கூட்டாண்மை நிலை உட்பட கடந்தாண்டு நியூசிலாந்து பிரதமரின் வருகையால் மேலும் வலுப்பெற்றதாக குறிப்பிட்டார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]