பொது

பிரதமரின் உத்தரவு நாட்டின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் - ஃபஹ்மி

20/09/2024 06:09 PM

புத்ராஜெயா, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- அலுவல் பயணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அவர்களின் அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவு என்பது நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களைக் கொண்டிருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''ஐ.எஸ்.யு நிர்வாகம் மற்றும் நிர்வாக அம்சங்கள் பலப்படுத்தப்படுவதை உறுதி செய்யப் பிரதமர் விரும்புகிறார். வெளிநாடு செல்ல காரணம் இருக்க வேண்டும். இவ்வளவு எண்ணிக்கை (அதிகாரிகள்) ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான காரணம். செலவைக் குறைக்க முடியுமா. அவற்றைப் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார் அவர். 

வெள்ளிக்கிழமை, புத்ராஜெயாவில் உள்ள தொடர்பு அமைச்சர் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதற்கு முன்பதாக, வெளிநாடு செல்லும் அரசாங்க அதிகாரிகள் அமைச்சின் தலைமை செயலாளரின் ஒப்புதலை பெற வேண்டும்.

இருப்பினும் இந்த புதிய உத்தரவு நாட்டின் கடனைக் குறைப்பதற்கும் அரசாங்கத் திட்டங்களின் செயல்முறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]