பொது

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

19/09/2024 08:32 PM

கூலிம், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று பிற்பகல் மணி இரண்டு வரையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 837-ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் 29 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா செதார், கூபாங் பாசு, போக்கோ செனா, பென்டாங், கோலா மூடா, பண்டார் பாரு மற்றும் கூலிம் ஆகிய ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை பேரிடர் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

கெடாவில் 9 ஆறுகளின் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் இருப்பதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, ஜேபிஎஸ் தெரிவித்துள்ளது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)