பொது

தாயகம் திரும்பினார் கொசொவோ அதிபர்

04/05/2025 05:58 PM

சிப்பாங், 04 மே (பெர்னாமா) -- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவு செய்து கொசொவோ அதிபர் டாக்டர் வியொசா ஒஸ்மானி செட்ரியு இன்று தாயகம் திரும்பினார்.

இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் பூங்கா ராயா வளாகத்தில் டாக்டர் வியொசா ஒஸ்மானியை வழியனுப்பி வைப்பதற்கு அரச மலேசிய இராணுவப் படையின் முதலாவது பெட்டலியனின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தப் பயணம் முழுவதும் டாக்டர் வியொசா ஒஸ்மானியுடன் இருந்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அவரையும் அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்தார்.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி அதிபராக பதவியேற்ற பிறகு, ஒஸ்மானி கடந்த வியாழக்கிழமை மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

மலேசியாவுடன் அரசதந்திர, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த கொசொவோ தயாராக இருப்பதாக சாவர் கூறினார்.

அதோடு, இது கோலாலம்பூரில் கொசொவோ தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கை, அந்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]